தமிழக இளங்கலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நிறைவு சான்றிதழ் – மாணவர்கள் கோரிக்கை!!
2015-2020 ஆம் ஆண்டுகளில் பல் மருத்துவம் படித்த மாணவர்கள் நிறைவு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இது தொடர்பாக மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பல் மருத்துவ படிப்புகளுக்கான சான்றிதழ்:
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் பல் மருத்துவ கல்லூரிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டன. இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஜனவரி மாதம் முதல் தான் திறக்கப்பட்டுள்ளன. இதனால் 2015 முதல் 2020 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர்கள் தங்களது படிப்பை முடித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் படிப்பு முடித்ததற்கான தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது ஓராண்டு மருத்துவ பயிற்சி பெற வேண்டும். ஆனால் அவர்கள் கொரோனா காரணமாக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதால் பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. மேலும் அந்த மாணவர்கள் தற்போது முதுகலை படிப்புகளில் சேர முடியாமலும், தனி பயிற்சி பெற முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசுப்பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – அரசிடம் கோரிக்கை!!
மேலும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதுகலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியானது. தற்போது முதுகலை படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆனால் பயிற்சி சான்றிதழ் இல்லாத காரணத்தால் 2019ம் ஆண்டு படிப்புகளை முடித்த மாணவர்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர் சேர்க்கை – பிப்ரவரி 24 கடைசி நாள்!!
பல மருத்துவமனைகள் வாய்மொழி வழியாக பயிற்சி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு விரைவில் நிறைவு சான்றிதழ் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்