தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த ஆண்டு இதன் வேகம் அதிகமாக உள்ளது. அதனால் கட்டுப்பாடுகளை கடுமையாக மக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தற்போது தமிழகத்தில் இரவு ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது திரையரங்குகள், பெரிய கடைகள் அடைப்பு போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பொழுதுபோக்கு பூங்காக்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகளில் இரவு 9 மணி வரை பார்சல் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் அரசு மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை, வங்கிகளில் நேர குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
இதில் மேலும் சில கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது. அதில் சினிமா படப்பிடிப்பு, சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. முழு ஊரடங்கில் சென்னையில் குறைந்த அளவில் மெட்ரோ ரயில்கள் இயங்கும். வாக்கு எண்ணிக்கை தினமான மே 2 முழு ஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு செல்வோர் தங்களது அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம்.