தமிழகத்தில் மே 3 வரை முழு ஊரடங்கு? இன்று முக்கிய முடிவு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மே 1, 2, 3 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இது குறித்த முக்கிய முடிவு இன்று வெளியிடப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்திற்கு அதிகமாக உள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
புதிதாக வீடு வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு – LIC வீட்டுக்கடன் ஆவணங்கள் விபரம்!
ஏற்கனவே புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்திலும் மே 1,2,3 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும், அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என கூறப்படுகிறது.