தமிழகத்தில் மீண்டும் முழு பொதுமுடக்கம்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா? என்பதற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த ஆண்டை போல கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை எனவும் அரசு தெரிவித்த கட்டுப்பாடுகளை பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “தமிழக்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை. அரசு தெரிவித்த கட்டுப்பாடு வழிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா அதிகமாக உள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் கட்டுப்பாடுகளை முறையாக கவனிக்க வேண்டும்.
நாடு முழுவதும் போக்குவரத்துக்கு தடை? மத்திய அரசு இன்று ஆலோசனை!!
அரசுக்கு பயந்து முகக்கவசம் அணியாமல், கொரோனா கட்டுப்பாடு என தங்களுக்காகவும், குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்காது. மேலும் வீட்டிலிருந்தே பணிபுரிய வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து வீட்டிலிருந்தே பணிபுரியலாம்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.