தமிழக தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு திட்டம் – நீதிமன்றத்தில் வழக்கு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்ய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொருளாதார ஊக்குவிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் பரவி வருகிறது. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது. பலர் தங்களது வேலையை இழந்து அன்றாட வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் தவிர தனியார் ஊழியர்கள் தான் இதில் குறிப்பாக பாதிப்புக்கு உள்ளாகினர்.
TN Job “FB Group” Join Now
அதில் பல்வேறு தளர்வுகளுக்கு பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பல தொழில் நிறுவனங்கள் நிலைமையை கட்டுப்படுத்த அனுபவம் குறைந்த ஊழியர்களை குறைந்த ஊதியத்தில் பணியில் அமர்த்தினர். இதனால் பல வருடம் அனுபவம் உள்ள ஊழியர்கள் நிலைமை மிகவும் மோசமானது.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!!
தற்போது இரண்டாம் அலை தாக்கம் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதனால் ஊரடங்கால் தங்களது ஊதியத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரத்தை ஈடு செய்யும் நோக்கில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க உயர்மட்ட குழுவை அமைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து 12 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.