நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு குறித்து முடிவு செய்ய நாளை காலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த நாளை காலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருவதால் அதனை தடுக்க முழு ஊரடங்கு தேவையா? என்ப2து குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.