தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? தலைமை செயலர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக இரவு நேரம், ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தலைமை செயலர் அவர்கள் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தலைமை செயலர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலையின் விளைவாக நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் வார இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – அறிவிப்பு வெளியீடு!!
இந்நிலையில் தினசரி அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு பிறப்பிப்பது அல்லது மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமை செயலை ராஜீவ் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பது, கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சில மாநிலங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த 7 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.