தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – அறிவிப்பு வெளியீடு!!
தமிழக தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், மீறினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அணியாமல் பொது இடங்களுக்கு செல்லுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கான கொரோனா கட்டுப்பாடு விதிகளை அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு? கல்வியாளர்கள் அச்சம்!!
அதில் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் எனவும், அவ்வாறு அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக பரவி வரும் நேரத்தில் மக்கள் கட்டாயம் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.