நவீனமயமாகும் அரசு பேருந்துகள்.. மகிழ்ச்சியில் தமிழக மக்கள் – வெளியான அப்டேட்!
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மாநகர பேருந்துகளில் உள்ள நவீன வசதி மேலும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அரசு பேருந்துகள்
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் மட்டும் தான் அதிகமான அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. அதாவது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 700க்கு மேற்பட்ட வழித்தடங்களில் 3,454 பேருந்துகளும், சாதாரண கட்டணத்தில் 1,559 பேருந்துகளும், விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் 1,674, ஏசி பேருந்துகள் 48, சிறிய பேருந்துகள் 207 இயக்கப்படுகின்றன. சென்னையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பலர் வேலை நிமித்தமாக வசிக்கின்றனர். அவர்களின் வசதிக்காக மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7 லட்சம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு – அரசின் தீபாவளி போனஸ்!
இதன் மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை 100 மீட்டர் தொலைவுக்கு முன்னேரே அறிவிக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் முதற்கட்டமாக 150 பேருந்துகளில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது பயணிகளுக்கு உதவியாக இருந்தது. அதனால் இதே போல 500 பேருந்துகளில் இந்த திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.