தமிழகத்தில் ஜூன் 14 முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி? அரசு விளக்கம்!
தமிழகம் முழுவதும் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வார காலம் அதாவது ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி உண்டா? என்பதற்கு அரசு சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அன்று முதலே பேருந்து பொதுப்போக்குவரத்திற்கு அரசு தடை விதித்தது. இருப்பினும் முன்களப் பணியாளர்கள் பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் குறிப்பிட்ட அளவு இயக்கப்பட்டது. ஜூன் 24 வரை ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அரசு அனுமதி அளித்தது. இதனால் பொதுவெளிகளில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போலவே காணப்பட்டது. இதன் விளைவாக கொரோனா நோய்த்தொற்று தினசரி பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்று 35 ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
எனவே கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு மே 24 முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் 2 நாட்கள் இயக்கப்பட்டன. ஜூன் 7 வரை அமலில் இருந்த தளர்வுகள் அற்ற ஊரடங்கின் விளைவாக கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது. இதனால் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடைகள் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் 21 வரை கூடுதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர பிற 27 மாவட்டங்களில் குறிப்பிட்ட நேரம் டாஸ்மாக் கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சலூன், அழகு நிலையங்கள் செயல்படவும் அரசு தளர்வுகள் அளித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த பேருந்து போக்குவரத்திற்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வாடகை ஆட்டோக்கள், டாக்சிகள் குறிப்பிட்ட அளவு பயணிகளுடன் இ-பதிவுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.