தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

0
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி - ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி - ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர பிற 27 மாவட்டங்களில் ஜூன் 14ம் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. டாஸ்மாக் கடைகளை குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தளர்வுகள்:

  • அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌, குளிர்‌சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50 சதவிகித வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அனுமதிக்க வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • அரசு பூங்காக்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள பூங்காக்கள்‌, விளையாட்டு திடல்களில்‌ காலை 6.00 மணி முதல்‌ காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.
  • வேளாண்‌ உபகரணங்கள்‌, பம்பு செட்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

TN Job “FB  Group” Join Now

  • மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ பழுதுநீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • டாஸ்மாக்‌ கடைகள்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • செல்பேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மிக்ஸி, கிரைண்டர்‌, டி.வி. பிரிட்ஜ்‌ உள்ளிட்ட வீட்டு உபயோகப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு – என்னென்ன தளர்வுகள்?

  • பள்ளி, கல்லூரிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிருவாகப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.
  • ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 50 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • தற்போது இதர தொழிற்சாலைகளும்‌ 33 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • தொழிற்சாலைகளில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்கள்‌ நான்கு சக்கர வாகனங்களில்‌ பணிக்கு செல்ல ஏற்கனவே
    அனுமதிக்கப்பட்டிருந்தனர்‌. தற்போது அவர்கள்‌ தங்களது இரு சக்கர வாகனங்களிலும்‌ இ- பதிவு மற்றும்‌ தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன்‌ பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்‌.
  • தகவல்‌ தொழில்நுட்பம்‌ / தகவல்‌ தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில்‌ 20 சதவிகிதம்‌ பணியாளர்கள்‌ அல்லது 10 நபர்கள்‌ மட்டும்‌ பணிபுரிய அனுமதிக்கப்படுவர்‌.
  • வீட்டு வசதி நிறுவனம்‌ வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌ மற்றும்‌ அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள்‌ 33 சதவிகித பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!