தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆய்வக பயிற்சி வகுப்புகள் – இன்று முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வகுப்புகள் இன்று முதல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வக பயிற்சி:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி காரணமாக பொதுத்தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என்பதால், அவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
மேலும் அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) முதல் செய்முறை தேர்வுகளுக்கான ஆய்வக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
மத்திய பல்கலை மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு – ஜூன் மாதம் நடத்த ஏற்பாடு!!
இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகள் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற உள்ள செய்முறை தேர்வுகளுக்கு முன்னதாக முடிக்கப்பட்டு மாணவர்களிடம் இருந்து பதிவேடுகளை சேகரிக்க உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.