மத்திய பல்கலை மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு – ஜூன் மாதம் நடத்த ஏற்பாடு!!
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நுழைவுத் தேர்வுகள்:
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையின் படி, மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை வழங்க பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரை செய்தது. அதனை ஏற்ற உயர்கல்வித்துறை நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வழங்க நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தனர்.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உட்பட 41 பல்கலைக்கழகங்களில் இந்த தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான விண்ணப்பதிவு இம்மாத இறுதியில் தொடங்கப்படும் எனவும் இந்த தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் மூலமாக மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம்.
ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
மேலும் முதுகலை, ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையை பின்பற்றி மத்திய அரசு மேற்கொள்ளும் பொது நுழைவுத் தேர்வானது, குறிக்கோள் வகை மற்றும் விரிவான பதில் எழுதல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டா நுழைவுத்தேர்வு நாளை முதல் துவக்கம் !
இந்த திட்டம் மூலமாக இளங்கலை படிப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை மூலமாக மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என்ற நிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள எந்த கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.