தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் – அமைச்சர் உறுதி!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டு உள்ளன. மே 1 முதல் அரசு, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அடுத்த கல்வியாண்டு துவங்க உள்ளதால் அதற்கான பணிகள் நடைபெற உள்ளது. ஆனால் இன்னும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக புதிதாக பொறுப்பேற்று உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்துவது, ரத்து செய்தால் மதிப்பெண் வழங்கும் முறை, அவரவர் பள்ளிகளிலேயே தேர்வுகளை நடத்துவது என அனைத்து சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்றும் அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மே 25 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு திட்டம்!
இதில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் கூறி உள்ளார். இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வ வர்மா,பேராசிரியர் கல்யாணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், அமைச்சர் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.