தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படிக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவது குறித்து அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, போக்குவரத்துப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழங்கப்படும் அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
அடுத்த 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – 30 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி!
அதனை தொடர்ந்து தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த அகவிலைப்படியை கடந்த ஜூலை மாதத்தை முன்தேதியிட்டு வழங்கவும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை வழங்கப்பட்டு வந்த 28% லிருந்து 3% உயர்த்தி 31% ஆக வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உயர்த்தி வழங்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முதல் பருவத்தேர்வு முடிவுகள் குறித்த தகவல்!
இத்தகைய அகவிலைப்படி உயர்வும் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மீண்டும் 3% உயர்த்தி அடுத்தகட்ட அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் உயர்த்துவதாக சொன்ன முதல் அகவிலைப்படியையே இன்னும் தமிழக அரசு வழங்காமல் இருந்து வருகிறது. இது மாநில அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்த்தி வழங்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளார்.