அடுத்த 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – 30 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி!
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 30 பேருக்கு ஒரே நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பதிவாகி இருப்பதால் அடுத்த 15 நாட்களுக்கு அப்பகுதியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு
உலகளவில் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்திருக்கும் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று தற்போது பாகிஸ்தானை சேர்ந்த 30 பேருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிச.8ம் தேதியன்று தனது முதல் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், போட்ஸ்வானா, நமீபியா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணம் செய்வதற்கு பாகிஸ்தான் அரசு முழுமையான தடை விதித்திருந்தது.
ஓமைக்ரான் தொற்றால் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறோம் – பில்கேட்ஸின் “ட்விட்டர்” பதிவு!
அதே நேரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, மெக்ஸிகோ, இலங்கை, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தடுப்பூசி சான்றிதழை கட்டயாமாக்கி இருந்தது. இத்தனை கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தற்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 30 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பதிவாகி இருக்கிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை ரத்து? அறிக்கை தகவல்!
அதாவது கொரோனா தொற்று அறிகுறிகளுடன் தென்பட்ட நபர்களிடம் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இப்போது பாதிப்புக்குள்ளான அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதையடுத்து அம்மாகாணத்தின் கெச் மாவட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய பணிகள், உணவகங்கள் மட்டும் செயல்படுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.