CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முதல் பருவத்தேர்வு முடிவுகள் குறித்த தகவல்!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு முடிவுகள் 2022 ஜனவரி மாதம் 2 வது வாரத்தில் வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவை எதிர்பார்த்து வருகின்றனர்.
சிபிஎஸ்இ:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் . இந்நிலையில் மத்திய கல்வி வாரியம் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்த திட்டமிட்டது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை ரத்து? அறிக்கை தகவல்!
மேலும் ஆண்டு பொதுத் தேர்வுக்கு பதில், இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த நவம்பர் 16 ம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்கியது. குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் படி கொள்குறி வகை வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெற்றது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவு பெற்றது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத் தேர்வுகள் மட்டும் இன்னும் நடைபெறாமல் உள்ளது. நிலுவையில் உள்ள தேர்வை டிசம்பர் 29ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய தகவல் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இன்டர்னல் மதிப்பெண்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ முதல் பருவத்தேர்வு முடிவுகள் 2022 ஜனவரி மாதம் 2ம் வாரத்தில் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எந்த மாணவரும் பெயில் ஆக மாட்டார்கள். இந்த கட்டத்தில் சிபிஎஸ்இ எந்த மாணவரையும் தோல்வியடைய செய்யாது என்று அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு முடிவு தேதிகள் தொடர்பான தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.