தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..மகிழ்ச்சியில் பொதுமக்கள் – வானிலை அப்டேட்!

0
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..மகிழ்ச்சியில் பொதுமக்கள் - வானிலை அப்டேட்!

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பாகவும், ஒரு சில இடங்களில் இயல்பை விட அதிகமாகவும் நீடித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் தவிக்கும் நிலை இருந்து வந்தது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பொழிவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலே நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

நாளை முதல் ஏப்ரல் ஏழாம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளிலும் வறண்ட வானிலேயே நிலவும். ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது வாரத்தின் நாட்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்வது தொடர்பான எச்சரிக்கை குறிப்புகள் எதுவும் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!