அடுத்த 3 நாட்கள் தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட்!

0
3 நாட்கள் தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பொழிவு எதுவும் பதிவாகவில்லை. அதனால் அங்கு வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு ஆரம்பிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இன்று முதல் தமிழகத்தின் நீலகிரி போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களில் இரவு வேளைகளில் உறைப்பனி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!