அஞ்சல் அலுவலகத்தில் நேர வாய்ப்பு திட்டத்தில் தற்போது அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்யும் தொகை மற்றும் கால அளவுக்கு ஏற்ப வட்டி விகிதமானது நிர்ணயிக்கப்படுகிறது. இத்திட்டம் குறித்த விவரங்களை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
அஞ்சலக திட்டம்:
அஞ்சலகத்தின் நேர வாய்ப்பு திட்டமானது வங்கிகளில் செயல்பட்டு வரும் நிலையான வைப்பு தொகை திட்டம் போல் இருந்து வருகிறது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். வட்டியானது ஒவ்வொரு காலண்டிற்கும் ஒரு முறை கணக்கிடப்படும். உதாரணமாக ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 6.9% வட்டி வீதத்தில் உங்களுக்கு ஒரே வருடத்தில் வட்டி மட்டுமே 7,081கிடைக்கும். அடுத்ததாக இரண்டு வருட கால வைப்பு தொகையில் வட்டி வீதமானது 7% ஆக கணக்கிடப்பட்டு 14,888 ஆக வரவு வைக்கப்படும்.
இவ்வாறு வட்டி தொகையானது அதிகரித்துக் கொண்டே செல்லும். அதிகபட்சமாக ஐந்து வருட கால வைப்பு தொகையில் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டிற்கு 7.5% வட்டி வீதத்தில் ரூ.44,995 என மொத்தமாக ரூ.1,44,995 திரும்ப பெறலாம். இத்திட்டத்தில் வருமான வரி சட்டத்தின் கீழ் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு சலுகையும் அளிக்கப்படும். வங்கிகளை ஒப்பிடும் போது அஞ்சல் நிலையத்தின் வட்டி விகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.