Post Office டெபாசிட் திட்டம் – 7% வட்டியில் 1.4 லட்சம் வரை ரிட்டன்!

0
Post Office டெபாசிட் திட்டம் - 7% வட்டியில் 1.4 லட்சம் வரை ரிட்டன்!

அஞ்சல் அலுவலகத்தில் நேர வாய்ப்பு திட்டத்தில் தற்போது அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்யும் தொகை மற்றும் கால அளவுக்கு ஏற்ப வட்டி விகிதமானது நிர்ணயிக்கப்படுகிறது. இத்திட்டம் குறித்த விவரங்களை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

அஞ்சலக திட்டம்:

அஞ்சலகத்தின் நேர வாய்ப்பு திட்டமானது வங்கிகளில் செயல்பட்டு வரும் நிலையான வைப்பு தொகை திட்டம் போல் இருந்து வருகிறது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். வட்டியானது ஒவ்வொரு காலண்டிற்கும் ஒரு முறை கணக்கிடப்படும். உதாரணமாக ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 6.9% வட்டி வீதத்தில் உங்களுக்கு ஒரே வருடத்தில் வட்டி மட்டுமே 7,081கிடைக்கும். அடுத்ததாக இரண்டு வருட கால வைப்பு தொகையில் வட்டி வீதமானது 7% ஆக கணக்கிடப்பட்டு 14,888 ஆக வரவு வைக்கப்படும்.

இவ்வாறு வட்டி தொகையானது அதிகரித்துக் கொண்டே செல்லும். அதிகபட்சமாக ஐந்து வருட கால வைப்பு தொகையில் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டிற்கு 7.5% வட்டி வீதத்தில் ரூ.44,995 என மொத்தமாக ரூ.1,44,995 திரும்ப பெறலாம். இத்திட்டத்தில் வருமான வரி சட்டத்தின் கீழ் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு சலுகையும் அளிக்கப்படும். வங்கிகளை ஒப்பிடும் போது அஞ்சல் நிலையத்தின் வட்டி விகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!