எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – சம்பளம்: ரூ.15,700/- || உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்தியசிறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் & ஜெயங்கொண்டம் கிளைச்சிறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தூய்மை பணியாளர்கள் பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | அரியலூர் & ஜெயங்கொண்டம் கிளைச்சிறை |
பணியின் பெயர் | தூய்மை பணியாளர் |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Sub Jail காலிப்பணியிடங்கள்:
தூய்மை பணியாளர் பைக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Cleanliness Workers கல்வி தகுதி:
தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Sub Jail வயது வரம்பு:
18 வயது பூர்த்தியான 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Follow our Instagram for more Latest Updates
Cleanliness Workers ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,700/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
Sub Jail தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விவரங்களை (Resume) திருச்சி 20, மத்திய சிறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு 13.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.