தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை – குழப்பத்தில் குடும்ப தலைவிகள்.. திட்டத்தின் நிலை என்ன?

0
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை – குழப்பத்தில் குடும்ப தலைவிகள்.. திட்டத்தின் நிலை என்ன?

தமிழகத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அனைவரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் நிபந்தனைகள் உண்டு என்று தெரிவிக்கபட்டுள்ளதால் பெண்கள் சற்று குழப்பமடைந்துள்ளனர்.

உரிமைத்தொகை:

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்காக அரசு சுமார் 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நேரத்தில் நிபந்தனைகள் அடிப்படையில் தகுதியுடையோர்களுக்கு மட்டுமே ரூ . 1000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று தகவல்கள் வந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு – வலுக்கும் கோரிக்கை!

இது தொடர்பாக அரசாணைகள் இதுவரை வெளியாகவில்லை. தற்போதைய தகவல்களின் படி பார்த்தால் அரசின் மற்ற உதவித்தொகை திட்டங்களின் பயனடைபவர்கள் அதாவது முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் ஆகிய திட்ட பயனர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ. 1000 உரிமைத்தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இத்தகைய தகவல்கள் குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமக்கு உரிமைத்தொகை கிடைக்குமா? இல்லையா என்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் எவ்வித நிபந்தனைகளும் இன்றி அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!