தமிழகத்தில் நூதன முறையில் பண மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

0
தமிழகத்தில் நூதன முறையில் பண மோசடி - காவல்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் நூதன முறையில் பண மோசடி - காவல்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் நூதன முறையில் பண மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரிக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக நூதன முறையில் மோசடி நடைபெறுவதாக சென்னை காவல்துறை எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

காவல்துறை எச்சரிக்கை:

தமிழகத்தில் அனைத்தும் தற்போது டிஜிட்டல் சேவையாக மாறிவிட்டது. ரோட்டு கடை முதல் பெரிய மால்கள் வரை ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனைகள் எளிதாகி விட்டது. மேலும் அனைவரும் தற்போது ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் எளிதாகவும், விரைவாகவும் நடைபெறுகிறது. ஆனால் ஆன்லைன் மூலமாக செய்யும் பரிவர்த்தனைகள் பல சிக்கல்களும் எழுந்துள்ளன.

நீட் நுழைவுத் தேர்வு அக்டோபர் வரை ஒத்திவைப்பு? அரசுக்கு கோரிக்கை!

பணபரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் ஆப்கள் மூலமாக பல நன்மைகள் இருந்தாலும் இதில் பாதுகாப்பு தன்மை என்பது குறைவாகவே உள்ளது. யாரேனும் எளிதாக இந்த செயலியை பயன்படுத்தும் வகையில் உள்ளது. UPI பின் தெரிந்தால் போதும் எளிதாக பணம் எடுக்க முடியும். இந்நிலையில் சென்னை காவல்துறை ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் உங்களது செல்போனில் ஏதாவது வசதியை பெற அல்லது பதிவு செய்ய WALLET ஆப் மூலமாக ரூ.1, ரூ.10 செலுத்துமாறு ஏதாவது இணையதள முகவரி மூலமாக குறுந்தகவலோ, மின்னஞ்சலோ அனுப்பப்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். குறைவான தொகை என நினைத்து போலியான முகப்பில் பணம் செலுத்துவது மூலமாக உங்களது மொத்த பணமும் எடுக்கப்படும். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாத யாருக்கும் பண பரிமாற்றம் செய்து மோசடியாளர்களிடம் சிக்கிவிடக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!