தமிழக ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் உயர்வு – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் உயர்வு - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் உயர்வு - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் உயர்வு – அமைச்சர் அறிவிப்பு!

தமிழக ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் ரூபாய் 1000 ல் இருந்து ரூபாய் 2000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சி:

தமிழகத்தில் கடந்த 4 ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆகஸ்ட் 13ம் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதன்படி இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அறிவிப்புகள் இடம் பெற்றது. இதில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இந்த வருடத்தில் வழங்குவது குறித்து அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை.

India vs England 3வது டெஸ்ட் – மார்க் உட் விலகல், இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் அறிவிப்பு!

அகவிலைப்படி தொடர்பான அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பஞ்சாயத்து தலைவர்களின் மாத ஊதியம் ரூ.1000ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய உயர்வு மூலம் தமிழகத்தில் 12000 க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் பயன் பெறுவார்கள். மேலும் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு ‘முன் மாதிரி கிராம விருது’ வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு ‘மணிமேகலை விருது’ வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!