India vs England 3வது டெஸ்ட் – மார்க் உட் விலகல், இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் அறிவிப்பு!
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள 3 ஆவது டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட்டுக்கு பதிலாக புதிய வீரர் சாகிப் மக்மூது களம் காணுவார் என்ற தகவல் வெளியாகியள்ளது.
டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியானது ட்ராவில் முடிந்தது. இதை தொடர்ந்து 2 ஆவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் 3 ஆவது போட்டி நாளை (ஆகஸ்ட் 25) துவங்குகிறது.
தமிழகத்தில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு உத்தரவு!!
இந்நிலையில் 2 ஆவது டெஸ்ட் தொடரின் போது பீல்ட்டிங் பகுதியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் பந்தை தடுக்க முயன்ற போது காயமடைந்தார். இந்த காயம் இன்னும் சரியாகாததால் அவர் 3 ஆவது டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதனால் இவருக்கு பதில் புதிய வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மக்மூது இங்கிலாந்து அணியில் இடம் பெறுவர் என கேப்டன் ஜோ ரூட் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
நாளை துவங்கும் இந்த போட்டியில் ஹமீத் ஹசீப், ரோரி பர்ன்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் எனவும், புதிதாக டேவிட் மலான் அணியில் இடம்பெறுவார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து அணியில் இடம் பெறவுள்ள சாகிப் மக்மூத், இதுவரை 7 ஒருநாள் போட்டிகள், 9 T 20 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கலந்து கொண்ட இவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
இந்த அணியில் கிரெய்க் ஓவர்டன், ஆலி போப் உள்ளிட்ட வீரர்களும் அணிக்குள் திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக இங்கிலாந்து அணி பேட்டிங் பகுதியில் பலவீனமானது. இந்த போட்டிகளில் ஜோ ரூட் விளையாடவில்லை என்றால் அந்த அணி வெற்றி பெறுவது கடினமான விஷயமாக கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய அணியின் பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இடம் பெற்றுள்ளதால் வெற்றி வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.