செப். 14ல் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆஜராக வேண்டும் – சென்னை நீதிமன்றம் உத்தரவு!
அ.தி.மு.க புகழேந்தி தொடுத்துள்ள வழக்கு குறித்து நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து செப்டம்பர் 14 ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை தொடர்ந்து பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கட்சி நடத்தப்பட்டு வருகிறது. புகழேந்தி அவர்கள் அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் ஆக இருந்து வந்தார். ஜூன் 14ம் தேதி அன்று புகழேந்தி அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அறிவிப்பினை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் வெளியிட்டனர்.
தமிழக ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் உயர்வு – அமைச்சர் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து அவர்கள் விடுத்த அறிக்கை, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் மீது, அவதுாறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி, சென்னையில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதை தொடர்ந்து இந்த வழக்கில், நீதிமன்றத்தில் இருந்து ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறி பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் சார்பில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், இருவரின் கோரிக்கையையும் ஏற்க மறுத்தது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 14ம் தேதி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.