தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விலக்கு ? புதிய கொரோனா கட்டுப்பாட்டுகள் !
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 10) முதல் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளில் மதுபான கடைகளுக்கு எந்த ஒரு கட்டுப்பாட்டு விதிமுறையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கட்டுப்பாடு விதிமுறைகள்:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை மையங்கள், கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் போன்றவற்றை அமைத்தும் வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை குறைப்பதற்காக புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
இந்த விதிமுறைகள் இன்று (ஏப்ரல் 10) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதில் கூறியதாவது, பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செல்வதற்கு தடை, கோவில் போன்ற மத திருவிழாவிற்கு தடை, திருமண நிகழ்ச்சியில் 100 பேர் மட்டும் பங்கேற்பு போன்ற பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்தனர். மேலும் கொரோனா தீவிரமடைந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் கொரோனா தீவிரம் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!
தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடு வழிமுறைகளில் மதுபான கடைகளுக்கு எந்த ஒரு விதிமுறையும் அறிவிக்கவில்லை. இதனால் பல கேள்விகள் எழுந்து வருகிறது. மதுபான கடைகளுக்கு செல்லும் மது அருந்துபவர்கள் மதுபானம் அருந்திவிட்டு மாஸ்க் அணியாமல், கைகளை கழுவாமல் சுமார் 1 மணி நேர்தத்திற்கு மேலாக சுற்றி வருகிறார்கள். இதனால் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தமிழக அரசு டாஸ்மாக், பார்கள், மதுபான கடைகளுக்கு எந்த ஒரு விதிமுறையும் அறிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.