தமிழகத்தில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 10% அதிகரிப்பு – வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் ஆண்டுதோறும் வருமான வரி செலுத்துபவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக தமிழக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
வருமான வரி
தமிழகத்தில் வருமான வரித்துறை அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10% அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 11 ஆம் தேதி பொதுவிடுமுறை – மாநில முதல்வர் அறிவிப்பு!
மேலும் நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி இலக்கை ரூ.1,08,200 கோடியாக நிர்ணயித்த நிலையில் தற்போது அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதன்படி இந்த ஆண்டில் மடக் ரூ.1,08, 500 கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பான் கார்டுடன் ஆதார் அட்டை அனைவரும் இணைத்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் சில காரணங்களுக்காக இணைக்காமல் உள்ளனர். இவர்களுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் மூலமாக பணப்பரிமாற்ற தகவல்கள் பெற முடியும். இதனால் வரி ஏய்ப்பை தடுக்க முடியும் என்பதால் அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Exams Daily Mobile App Download