தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது – அரசு திட்டவட்டம்!!
தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறையினர் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் நீட் தேர்வை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு:
மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு தான் நீட். இந்த தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் மருத்துவ படிப்பினை மேற்கொள்ள முடியும். தற்போது அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சில முக்கிய தகவல்கள் குறித்து உரையாட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்தலைமையில் பல முக்கிய அதிகாரிகள் காணொளி மூலம் அனைத்து மாநில அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் தமிழகம் சார்பில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் நீட் தேர்வில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் – சரிபார்க்கும் பணிகள் ஆயத்தம்!!
அதன்படி தமிழகத்தில் இனி நீட் தேர்வினை ஏற்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 7.5% இட ஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்டவர்களுக்கான 10% இட ஒதுக்கீடை தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதற்கான எழுத்துப்பூர்வமான அறிக்கை விரைவில் சுகாதாரத்துறையினருக்கு அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.