தமிழகத்தில் வீடுகளில் ஒரே மின் இணைப்பா? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் வீடுகளில் ஒரே மின் இணைப்பா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் வீடுகளில் ஒரே மின் இணைப்பா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் வீடுகளில் ஒரே மின் இணைப்பா? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே இணைப்பாக மாற்றபடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து தற்போது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மின் இணைப்பு:

தமிழகத்தில் மின் பயனர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன் பெயரில் கடந்த மாதங்களில் மின் பயனர்கள் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் வாயிலாகவும், ஆன்லைன் வாயிலாகவும் ஆதார் – மின் இணைப்பு பணியை மேற்கொண்டனர்.

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு ஒருநாள் விடுப்பு – வெளியான ஹாப்பி நியூஸ்!

இப்பணியை முடிக்க மின் பயனர்களுக்கு பிப். 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றும் நோக்கில் தான் ஆதார் எண் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற கருத்துக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக பரவி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இது குறித்து தற்போது மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதாவது தனித்தனி மின் இணைப்புகள் ஒரே இணைப்பாக மாற்றப்படும் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார். மேலும் மின் வாரியம் இது போன்ற எந்த உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!