மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு ஒருநாள் விடுப்பு – வெளியான ஹாப்பி நியூஸ்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினம்
உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரில் இன்று ஒரு நாள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் நேர மாற்றம் – மாணவர்கள் கவனத்திற்கு … புதிய அறிவிப்பு வெளியீடு!
இதையடுத்து, தமிழகத்தில், அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக இம்மாதம் முழுவதும் பெண்கள் இலவசமாக கண் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மதுரை மாநகரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட பெண் காவலர்களுக்கு இன்று ஒருநாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.