மார்ச் 13 மற்றும் 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு..
மாசி மாத பௌர்ணமியும், மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய தினம் மாசி மகம் என அழைக்கப்படுகிறது. இந்த நாள் சிவபெருமான் மற்றும் பெருமாளை வழிபட உகந்த நாளாக கூறப்படுகிறது. மேலும், புதுச்சேரியில் ஒரே இடத்தில் அனைத்து முக்கிய கோவில்களின் உற்சவர்களும் எழுந்து அருள்வதால் ஏராளமான பக்தர்கள் மாசி மகத்திற்கு தங்கள் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மாசி மகம் திருவிழா பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் திருவிழா புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் மார்ச் 13-ம் தேதியும், புதுச்சேரியில் மார்ச் 14-ம் தேதியும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் அரசு பொது தேர்வு ஏதேனும் இருந்தால் வழக்கம் போல் நடைபெறும் என்று புதுச்சேரி கல்வித்துறை தெரிவித்துள்ளது”


























