தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. வானிலை மையம் அறிவிப்பு!!
வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் சில முக்கிய மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் காலை வெயிலுடன் தொடங்கி மாலை கனமழை பெய்கிறது . இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று (அக்டோபர் 19) மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இன்று (அக்டோபர் . 19) தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




























13 மாவட்ட பெயர் போட்டுவிட்டு 16 மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்?!