10ம் வகுப்பு ரிசல்ட் எப்போது ?? – இன்று முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையிலா வழங்கலாமா அல்லது கிரேடு முறையிலா என்பது பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று நடைபெற உள்ள முக்கிய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு ரிசல்ட் எப்போது ??
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகைப் பதிவேட்டை கொண்டு 20% மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் நிறைய மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பதாலும், பல்வேறு பள்ளிகளில் அந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் இல்லாத காரணத்தாலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இதனால் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வழங்கலாமா அல்லது கிரேடு முறையில் வழங்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
பள்ளி திறப்பு எப்போது – மாநில அரசிற்கு மத்திய அரசு உத்தரவு
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்