பள்ளி திறப்பு எப்போது – மாநில அரசிற்கு மத்திய அரசு உத்தரவு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பரவி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் ரத்து செய்யப்படும் வந்தது.
இதனால் அடுத்த கல்வியாண்டிற்கான பள்ளி வகுப்புகள் திறப்பு எப்போது என்று எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
அதாவது அனைத்து மாநிலத்திலும் பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் என அனைவரிடத்திலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதனடிப்படையில், பள்ளிகள் திறப்பு குறித்து தீர்மானிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய மனித வள அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் இயல்பு நிலை கொண்டு வர பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும், அதனை தொற்றின் நிலையினை பொறுத்து மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் எனவும் ஆலோசிக்கப்படுகிறது. எனவே விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பிகள் வெளியாகலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |