10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!
சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ட்ரெண்டிங்காக இருந்த நைட்ரஜன் உணவுப்பொருட்களை பயன்படுத்துவதற்கு உணவு பாதுகாப்புத்துறையானது தற்போது தடை விதித்துள்ளது.
எச்சரிக்கை அறிவிப்பு:
சமூக வலைதளங்களில் வினோத உணவுப் பொருட்களை உண்டு அதன் வீடியோக்களை வெளியிடுவது பரவலாகிவிட்டது. அந்த வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை வாயில் பிஸ்கட்டை உள்ளே போட்டவுடன் புகை வெளியே வரும் நைட்ரஜன் பிஸ்கட்டுகள் மிகவும் அதிக வரவேற்பை பெற்று வந்தது. வினோதமாக உள்ளதால் மக்கள் இதை பயன்படுத்த ஆர்வம் காட்டி வந்தனர். எனவே இந்த நைட்ரஜன் உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அதிக அளவில் பெருகியது.
தெற்கு ரயில்வே வாரியத்தின் முக்கிய அறிவிப்பு – ரயில்கள் ரத்து!
தற்போது உணவு பாதுகாப்பு துறையானது குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது என்றும், உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்கக் கூடாது இவற்றை மீறி பயன்படுத்தினால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரை ஐசை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் என்றும் எச்சரித்துள்ளது.