இந்தியாவில் கோடை விடுமுறையை முன்னிட்டு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பு அம்சங்களால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
வந்தே பாரத் ரயில்
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது. முதற்கட்டமாக டெல்லி வாரணாசி இடையில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது 51 ரயில்கள் இயங்கி வரும் நிலையில் 4,500 வந்தே பாரத் ரயில்களை இயங்குவது மத்திய அரசின் நோக்கமாகும். தற்போது சென்னை சென்ட்ரல்- மைசூரு, சென்னை சென்ட்ரல் -கோவை, சென்னை சென்ட்ரல் – விஜயவாடா, சென்னை எழும்பூர்- திருநெல்வேலி, கோவை- பெங்களூர் போன்றவை தெற்கு ரயில்வேயின் கீழும், மைசூரு சென்னை சென்ட்ரல் ரயில் தென்மேற்கு ரயில்வே என்குயிலும் இயக்கப்படுகின்றன.
TNTET தேர்வு எழுத போறீங்களா? அப்போ கண்டிப்பா இது உங்களுக்கு தான்!
அடுத்த கட்டமாக மதுரை- பெங்களூரு ,கோவை- கன்னியாகுமரி, கோவை- திருவனந்தபுரம் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கோடை விடுமுறை முன்னிட்டு சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதாவது ஏப்ரல் 19 ,20 ,21 ,26 ,27, 28 ஆகிய தேதிகளில் கோடை சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது.