தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி அரசு விடுதிகள் பயோமெட்ரிக் பதிவு அமலாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு அதிரடி உத்தரவு:
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் விடுதி 8, மாணவிகள் விடுதி 11, கல்லூரி மாணவர் விடுதி 2, மாணவர் விடுதி 3 என மொத்தம் 38 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 1833 மாணவ மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இதற்காக தமிழக அரசு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது இங்கு மாணவர்கள் சரியாக வராத காரணத்தினாலும் பகலில் வந்துவிட்டு இரவில் வீடுகளுக்கு செல்வதால் பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
HAL நிறுவனத்தில் ரூ.25,910/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
மேலும் பணியாளர்களும் முறையாக பணிக்கு வராமல் உள்ளது போன்ற நடவடிக்கைகளால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக 2024-25 ஆம் கல்வி ஆண்டு முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமலாக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக மிஷின்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் மாணவர்கள், விடுதி காப்பாளர்கள், உதவியாளர்கள் தினமும் மாலை காலையில் வருகைப்பதிவு அவசியம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.