ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் அக்கவுண்ட் தொடங்குவது எப்படி? எளிய வழிமுறைகள்!
அடல் பென்ஷன் யோஜனா பென்ஷன் திட்டத்திற்கு ஆன்லைன் முறையில் கணக்கு தொடங்குவதற்கான எளிய முறைகளை குறித்து இந்த பதிவில் காண்போம்.
பென்ஷன் திட்டம்:
PFRDA இணையதளத்தின்படி, அடல் பென்ஷன் யோஜனா ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 1, 2015 அன்று தொடங்கப்பட்டது, இது அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்தவர்களுக்கான ஓய்வூதிய திட்டமாகும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம் ரூ. 1,000/- அல்லது 2,000/- அல்லது 3,000/- அல்லது 4,000 அல்லது 5,000/- மாதம் ஒன்றுக்கு 60 வயதை அடைந்த பிறகு சந்தாதாரர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த ஓய்வூதியத் தொகைக்கான பங்களிப்புகளைப் பொறுத்து வழங்கப்படும்.
SBI Kisan Credit Card திட்டம் – குறைந்த வட்டியில் கடன்! சூப்பர் திட்டத்தின் முழு விபரங்கள் இதோ!
வயது 18 முதல் 40 வயது வரை இருந்தால், இந்தியக் குடிமகனாக இருக்கும் எவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இதற்காக சேமிப்பு வங்கி கணக்கு / தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்கு இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். திட்டத்தை பற்றிய புதிய அறிவிப்புகளை விண்ணப்பதாரர்கள் APY இன் கீழ் தங்கள் பதிவுகளின் போது வங்கிக்கு மொபைல் எண்ணை வழங்க வேண்டும். அடல் பென்ஷன் யோஜனா மற்றும் eKYC சேவையை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் அடல் பென்ஷன் யோஜனா கணக்கை திறப்பதற்கான படிகள்:
அடல் பென்ஷன் யோஜனா கணக்கை திறக்க ஆதார் அடிப்படையிலான e-KYC செயல்முறையுடன் ஆன்லைனில் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் அனைத்து கணக்குகளும் பயனர்களின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. அனைத்து APY கணக்குகளும் ஆதார் எண்ணுடன் விதைக்கப்பட வேண்டும். ஒருவர் தனது சேமிப்பு வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்தை அணுகலாம் அல்லது சந்தாதாரரிடம் சேமிப்புக் கணக்கு இல்லையென்றால் அதனை தொடங்குவதன் மூலமும் சேவையை பெற முடியும்.