தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கை தயார் – ஒரு வாரத்தில் அரசிடம் ஒப்படைக்க முடிவு!
தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் அரசிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில கல்விக்கொள்கை:
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழகத்திலேயே பிரத்யேக கல்வி கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதாவது, 5 வயது முடிவடைந்த குழந்தைகளை மட்டுமே 1ஆம் வகுப்பில் சேர்க்கும் படியும், 1 ஆம் வகுப்பில் இருந்து தான் எழுத, படிக்க கற்றுக் கொடுக்கும் படியான அடிப்படைக் கல்வியை துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை!
அதே போல, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில கல்வி கொள்கை திட்டத்தின் படி திறன் வளர்ப்பு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநில கல்விக்கொள்கை திட்டத்தை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கும் படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் தமிழக அரசிடம் மாநில கல்விக்கொள்கையை ஒப்படைக்க இருப்பதாக குழுவினர் அறிவித்துள்ளனர்.