இந்திய அரசின் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் குறித்த முழு விவரங்களையும் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சேமிப்பு திட்டம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) என்பது அரசு சிறு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு சிறந்த திட்டமாகும். மேலும் இது பெண் குழந்தைகள் எதிர்காலத்தில் நிதி சுமையில் இருந்து தப்பிக்க தொடங்கப்பட்டுள்ளது. இதில் கவர்ச்சிகரமான பல்வேறு வரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த திட்டத்தில் ஒரு பெண் குழந்தைக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ. 1,50,000 வரை டெபாசிட் செய்யலாம். மேலும் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால், 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். SSY இல் முதலீடு செய்யப்படும் தொகைகள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ. 1,50,000 வரை வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து கழிக்கப்படும். இந்த கணக்கு தொடங்கப்பட்ட நாளில் இருந்து 18 ஆண்டுகளில் முதிர்வடையும், மேலும் பொது வருங்கால வைப்பு நிதியின் 7.1 சதவீதத்தை விட சற்று அதிகமாக 8.2 சதவீத வட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது.