போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – மாவட்ட வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு!!
அரசு தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் பி மற்றும் குரூப் சி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் அந்த தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற ஜனவரி 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி:
அரசு தேர்வு வாரியம் சார்பில் மத்திய அரசு பணிகளான வருமானவரித்துறை ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், கோட்ட கணக்குப் பதிவாளர், இளம் புள்ளியில் அலுவலர் உள்ளிட்ட 6,506 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி இந்த மாதம் 31-ஆம் தேதி ஆகும்.
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 80% பெற்றோர்கள் கோரிக்கை – தயாராகும் கல்வித்துறை!!
இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கட்டாயம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு தேர்வாணையம் விதித்த வயது வரம்பிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம். இந்த தேர்வுகளுக்கான வகுப்புகள் இணையம் மூலமாக நடைபெறும்.
கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் இந்த போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற ஜனவரி 21-ஆம் தேதி முதல் நடக்கவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 0421 2971152 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்