கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கட்டுமான தொழிலாளர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வேட்டி, அங்கவஸ்திரம் மற்றும் சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக முதல்வர் வழங்கினார்.
பொங்கல் பரிசு:
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முதன்முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று வேஷ்டி, அங்கவஸ்திரம், சேலை மற்றும் பொங்கல் பொருள்கள் வழங்கிடும் திட்டம் தொடர்பாக இன்று 7 ஊழியர்களுக்கு வழங்கினார்.
குரூப் 1 தேர்வு விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் – TNPSC அறிவிப்பு!!
கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரியம் சார்பில் பல நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அமைப்புசாரா நிறுவனங்களில் ஊழியர்களுக்கு நிவாரண தொகையாக 100 ரூபாய் மற்றும் ரேஷன் கடைகளில் 15 கிலோ அரிசி மற்றும் 1 லிட்டர் எண்ணெய் மற்றும் 1 கிலோ பருப்பு போன்றவை வழங்கியது. எனவே கொரோனா தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் தமிழக அரசு முதன்முறையாக சிறப்பு பொங்கல் பரிசு வழங்க திட்டமிட்டது.
108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் & மருத்துவ உதவியாளர் பணி – ஜனவரி 11 இல் தேர்வு!!
இதன்படி கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுடன், வேஷ்டி, அங்கவஸ்திரம், சேலை ஆகியவை வழங்கப்பட உள்ளது. அதன்படி 5,94,147 ஆண் தொழிலாளர்களுக்கும், 6,75,403 பெண் தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக தமிழக அரசு 94 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்