108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் & மருத்துவ உதவியாளர் பணி – ஜனவரி 11 இல் தேர்வு!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.
108 ஆம்புலன்ஸ் பணிகள்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., – ஏ.என்.எம்., – டி.பார்ம், டி.எம்.எல்.டி., பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், உயிரியல், வேதியியல், மைக்ரோபயாலஜி, தாவர உயிரியியல் போன்ற பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – மருத்துவத் துறை இயக்கம் அறிவிப்பு!!
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண், பெண் என இருபாலரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு 19 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளிக் கல்வித்துறையில் 18,500 தற்காலிக பணியிடங்கள் – 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை!!
108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்களுக்கு 14,426 ரூபாய் மாத சம்பளமும், ஓட்டுனர் பணிக்கு 14,226 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படும். ஓட்டுநர் பணிக்கு 24 வயது முதல் 35 வரை உள்ள 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுனர் பணிக்கு வாகன ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல் போன்றவை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதுகுறித்து கூடுதல் விவரம் அறிய 044 28888060, 75, 77, 88256 31174 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்