சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வர்களுக்கு பிப்.,28ல் எழுத்துத் தேர்வு!!
ராமநாதபுரத்தில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தில் கல்வி பயிலும் 15 வயதுக்கு அதிகமானவர்களுக்கு வரும் பிப்ரவரி 28ம் தேதி எழுத்துத் தேர்வு நடைகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சிறப்பு எழுத்தறிவு திட்டம்:
நாட்டில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கில் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது தான் எழுத்தறிவு திட்டம் ஆகும். இதன் மூலம் மக்கள் வாசிப்பது, எழுதுவது மற்றும் தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கணக்கீடுகள் பற்றி கற்பிக்கப்படுகிறது.
பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் – நேரடி முறையில் நடத்த கோரிக்கை!!!
சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் ராமநாதபுர மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட 15,273 பேருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில கல்வித்துறை (முறைசாரா கல்வி) இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
TN Job “FB Group” Join Now
எழுத்துத் தேர்வு:
ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்திற்கான எழுத்துத் தேர்வு மாவட்டம் முழுக்க 332 மையங்களில் தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்படுகிறது. வரும் பிப்ரவரி 28ம் தேதி தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வர்கள் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம். தேர்வுக்கு பின்னர் தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்