பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் – நேரடி முறையில் நடத்த கோரிக்கை!!!
பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் தேர்வுகளில் தொழிநுட்ப குளறுபடியால், தேர்வுகளை நேரடி முறையில் நடத்துமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
குற்றச்சாட்டு:
தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ் மொத்தம் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொறியியல் கல்லூரி தேர்வுகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது. ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதில் தற்போது பல சிரமங்கள் எழுந்துள்ளது. இணையதள வசதி பற்றாக்குறை மற்றும் தேர்வு நேர கட்டுப்பாடுகளால் மாணவர்கள் இணைய வழியாக தேர்வுகளை எழுதுவதற்கு சிரமமாக இருப்பதாக பல்கலையிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி ஆசியருக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவர்களுக்கு பரிசோதனை!!
கோரிக்கை:
பல்கலையின் தேர்வுகள் நடத்துவதற்கு தனியாக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அதன்மூலம் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதனால் முழுமையான 4ஜி வேகத்தில் இணையம் கிடைத்தால் மட்டுமே தேர்வை சரியாக எழுத முடியும். தேர்வின் போது சத்தம் கேட்டாலோ அல்லது கணினி திரையில் இருந்து கண்களை வேறு பக்கம் திருப்பினாலோ தேர்வில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். கல்லூரிகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளதால் இனி தேர்வுகளை நேரடி முறையில் நடத்தவும், உதவி மையத்தில் புகார் தெரிவித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
பல்கலை தரப்பு:
இது குறித்து அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், கொரோனா பரவல் காரணமாக தான் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவதால் தான் மாணவர்கள் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடாமல் தவிர்க்க முடியும். தேர்வு நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் உதவி மையத்தை தொடர்பு கொள்வதால் அனைவருக்கும் தொடர்பு கிடைப்பதில்லை. தற்போது நடக்கும் தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்கள் பதிவுசெய்த புகார்களின் அடிப்படையிலேயே மறுதேர்வு குறித்த முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்