தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்காக ஒரு நாள் சிறப்பு விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறப்பு விடுமுறை:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே மாதம் 2 ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தேர்தலின் போது அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் பல்வேறு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டது. ஆனால் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனால் மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் ஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக முடிந்த அளவு பாடங்களை நடத்த வேண்டும் என கல்வித்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இவற்றிற்கு இடையில் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாக்குப்பதிவுக்கு அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 7 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!!
ஆசிரியர்களின் இந்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு இந்த மாதத்தில் வேறு ஏதாவது ஒரு நாளை, சிறப்பு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு ஒரு நாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.