பல்லவன், வைகை ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னையில் தாம்பரம் யார்டில் பொறியியல் பணிகளின் காரணமாக ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 15 ஆகிய தேதிகளில் பல்லவன், வைகை ஆகிய விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ரயில்கள் மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் ரயில் சேவைகள் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர் – விழுப்புரம் பிரிவில் தாம்பரம் யார்டில் பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களில் மாற்றம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், செப்டம்பர் மாதம் 1, 8, 15 ஆகிய தேதிகளிலும், பல்லவன், வைகை, ஆகிய விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
மது வாங்க ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் – மாநில அரசு உத்தரவு!
மேலும் காரைக்குடி – சென்னை எழும்பூருக்கு ஆகஸ்ட் மாதம் 11, 18, 25 ஆம் தேதிகளிலும், செப்டம்பர் மாதத்தில் 1, 8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் (02606) செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூர் – மதுரைக்கு ஆகஸ்ட் 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் செப்டம்பர் மாதம் 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் (02635) சென்னை எழும்பூர் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவில் பக்தர்களுக்கு தடை – கொரோனா தடுப்பு!
இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து புறப்படும். மேலும் மாற்று வழியில் இயக்கப்படும் ரயில்களின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி – புது டெல்லிக்கு ஆகஸ்ட் 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் செப்டம்பர் மாதம் 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் காலை 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (04071) செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர், வழியாக மாற்று வழியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.