
” ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயிலில் ” இவ்வளவு வசதியா..!! அந்த வசதியை மட்டும் கேட்டீங்க அசந்து போயிருவிங்க..!!
அரசு மக்களுக்காக பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ரயிலில் பயணம் செய்யும் மக்கள் எவ்வித சிரமம் இன்றி பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக “ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில்” அறிமுகப்படுத்தப்பட்டது. இது சென்னையில் இருந்து இயக்க உள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது, அத்தகைய வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயிலில் என்னென்ன வசதிகள் உள்ளது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
1. அதாவது, 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் 823 பயணிகள் பயணிக்கலாம் என்றும், முதல் ரக ஏசி பெட்டியில் 24 பேரும், 2வது ரக ஏசி பெட்டிகளில் 188 பேரும் , 3வது ரக ஏசி பெட்டிகள் 11ல் 611 பயணிகளும் பயணம் செய்யலாம்.
2. வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா மற்றும் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
5 லட்ச ரூபாய்க்கு இலவச மருத்துவ காப்பீடு..!! அரசின் அசத்தல் திட்டம் அடுத்த வாரம் தொடக்கம்..!!
3. ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வதற்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு படுக்கைக்கு அருகிலும் மொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றிற்கு சார்ஜ் போடும் வசதி மற்றும் பொருட்களை வைக்க ஸ்டாண்ட் வசதிகளும் உள்ளது.
4. ஒவ்வொரு பெட்டிக்கும் Emergency Talk Back Unit என்ற கருவி உள்ளதால் அதன் மூலம் முன்பகுதியில் உள்ள லோகோ பைலட்டிடம் பேச முடியும்.
5. எந்தெந்த பகுதிகளில் ரயில் நிற்கும் என்பதை பார்ப்பதற்கு LED DISPLAY மற்றும் ஸ்பீக்கர்கள் உள்ளது























