நாடு முழுவதும் கடைகள் மூடப்படும் அவலம் – உணவு தட்டுப்பாடு எதிரொலி!
இலங்கையில் உச்சத்தை எட்டியுள்ள பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. தேவையான எரிபொருள் கிடைக்காததால் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடைகளுக்கு வந்து சேர வேண்டிய உணவு பொருட்கள் வராமல் உள்ளன.
கடைகள் மூடல்:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால் இதுவரை இல்லாத அளவிலான பொருளாதார பாதிப்பை இலங்கை சந்தித்து வருகிறது. மேலும் நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது. மேலும் சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதையடுத்து எரிபொருள், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, அவற்றின் விலை பன்மடங்காக உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் மின்வெட்டு கடுமையாக இருக்கிறது.
Exams Daily Mobile App Download
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் வாங்க பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கடந்த மாதம் மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோவுக்கு பெட்ரோல் கிடைக்காததால், நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இரண்டு வாரத்திற்கு முன்பு கொழும்பில் பாணந்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 9 பேர் இறந்து உள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முக்கியமாக, நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. அதாவது, வாகன இயக்கம் இல்லாததால் கடைகள் மற்றும் சந்தைகளுக்கு பொருட்கள் வருவது குறைந்து விட்டது. மேலும், ஒரு வாரமாக இந்த நிலை நீடிப்பதால் சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. மேலும் தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போதுமான இருப்பு வந்து சேராமல் கடை உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலை நீடித்து வந்தால், இலங்கை மக்கள் பட்டினிச்சாவிற்கு ஆளாகி விடுவார்கள் என்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.